search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடேச பெருமாள் கோவில்"

    • விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அவிநாசி:

    சேவூர் அருகே மொண்டிபாளையத்தில் மேலத்திருப்பதி எனப் போற்றப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாத தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ந் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. 4 -ந் தேதி பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடும், 5 -ந் தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது. 6-ந் தேதி மகாதிருமஞ்சனம், மகாதரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனைகள் ஆகியவையுடன் விழா நிறைவடைகிறது.

    ×